நெதர்லாந்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது நபர் ஒருவர் புகை குண்டு ஒன்றை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெதர்லாந்தின் எந்தோவென் நகரில் நடைபெற்ற பி.எஸ்.வி எந்தோவென் மற்றும் ஏ.எஃப்.சி அஜாக்ஸ் அணிகள் இடையேயான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தினை ரசிகர்கள் கண்டுகளித்துக்கொண்டிருந்த போது நபர் ஒருவர், புகை குண்டை வீசியுள்ளார். இதனால் பார்வையாளர்கள் பகுதி முழுவதும் புகை மண்டலமாய் மாறியது.
பார்வையாளர் பகுதியில் வீசப்பட்டது புகை குண்டு என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் பார்வையாளர்கள் பலருக்கு மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.
இதனால் சிறிது நேரம் கால்பந்தாட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. புகை குண்டு வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.






