வவுனியா சேமமடு சண்முகானந்தா.ம.வியில் சர்வதேச பூகோள தினம் அனுஸ்டிப்பு!(படங்கள்)

751

சர்வதேச பூகோள தினத்தை முன்னிட்டு சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர் பாராளுமன்ற விவசாய அமைச்சின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அதிபர் ள.சசிகுமார் தலைமையில் 25.4.2017 செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் பூகோள தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாடசாலை அதிபர் மற்றும் புவியியல் ஆசிரியரினால் இன்று புவி எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் அவற்றின் பாதுகாப்பு முக்கியத்துவம் எடுத்து கூறப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை சூழலை தூய்மையாக்கி புவிச்சூழலை சுத்தமாக வைத்திருக்க சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன்பாடசாலையில் சேரும் குப்பைகளை உரிய முறையில் பயன்படுத்தி கூட்டெரு தயாரிக்கும் முறையும் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை சூழலை அழகுபடுத்தி புவியை பாதுகாத்து இயற்கை சமனிலையை பேண மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.