இலங்கையில் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது!!

257

இலங்கையானது மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும், இந் நோயின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக மலேரியா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருகை தரும் சற்றுலா பயணிகள் அல்லது அந்நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் சிலர், இந்நோய் தொற்றுக்கு உள்ளாகியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் 1990இல் மலேரியா ஓழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2016 செப்டம்பர் மாதம் உலக சுகாதார மையத்தினால் மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தையும் பெற்றது.

2006 – 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள் நாட்டில் வருடமொன்றுக்கு ஆயிரம் மலேரியா காய்ச்சல் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை பூஜ்யம் என கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை காரணமாகவே, பிரதானமாக மலேரியா அச்சுறுத்தலுக்கு மீண்டும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார் என, பிபிசி செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு கூடுதலான நிதி செலவிடப்படுவதாகவும் அவர் மேலும்