ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!

517

இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது.

பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும் என்பது பொதுவான ஒரு விடயமாகும்.

எனினும் தற்போது கப்பல் பழ மரத்தில் செவ்வாழை காய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வென்னப்புவ லுனுவில கிரிமெட்டியான பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலேயே இந்த அரிய வகை வாழைப்பழங்களை காண முடிந்துள்ளன.

தற்போது இந்த மரத்தை பார்வையிடுவதற்கு பிரதேச மக்கள் பலர் அங்கு வருகைத்தருவதாகவும், அவர்களிடமிருந்து இதனை பாதுகாப்பதற்கு சிரமமாக உள்ளதென அதனை வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.