வவுனியா கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் பாலத்தில் மோதுண்டு பலி!!

634

Trian

கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் ஒருவர் அநுராதபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஒயா பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து நேற்றிரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ரயிலின் மிதிபலகையில் பயணம் செய்தபோது குறித்த இளைஞன் பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.