கியூபாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு மில்லியன் கணக்கான நண்டுகள் படையெடுப்பதால் கரையோரங்களில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான நண்டுகள் கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. பிக்ஸ் விரிகுடாப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நண்டுகளின் படையெடுப்பு நடைபெற்று வருகிறது.
இனப்பெருக்கம் காரணமாகவே இந்த நண்டுகள் கரைப்பகுதியை நோக்கி அதிகளவில் நகர்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை இவ்வாறு கரைப் பகுதியை நோக்கி நகரும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுவதுடன், பறவைகளுக்கும் இரையாகின்றன.