பரபரப்பான வீதி, வேகமாகச் சென்ற கார்கள் : குழந்தைக்கு நடந்தது என்ன?(காணொளி)

325

இரண்டு வயதுக் குழந்தையொன்று இரண்டு கார்களுக்கு அடியில் சிக்கியபோதும் தெய்வாதீனமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பரபரப்பான வீதியொன்றின் ஒரு பக்கத்தில் இந்த இரண்டு வயதுக் குழந்தை நின்றுகொண்டிருந்தது. அருகில் இருந்த பாட்டியை விட்டு விலகிய அந்தக் குழந்தை, வீதியின் ஒரு ஒழுங்கில் வாகனம் எதுவும் வராததால், திடீரென்று வீதியில் இறங்கி கடக்க முற்பட்டது.

வீதியின் ஒரு புறத்தைத் தாண்டிய அந்தக் குழந்தை, வாகனங்கள் சென்றுகொண்டிருந்த மறு புறத்தின் நடுப் பகுதிக்குச் சென்றது. அப்போது, இரண்டு வாகனங்கள் அடுத்தடுத்து அந்தக் குழந்தையைக் கடந்து சென்றன.

வாகனங்கள் சென்ற வேகத்தில் அந்தக் குழந்தை உடல் நசுங்கியிருந்திருக்க வேண்டும். ஆனால் தெய்வாதீனமாக குழந்தை கீழே குனிந்துவிட்டதால் எவ்விதக் காயமும் இன்றி உயிர் தப்பியது.

இந்தக் காணொளி வேக வேகமாக இணையத்தில் பரிமாறப்பட்டு வருகிறது.