உயிரிழந்த மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு தன்னுயிரையும் துறந்த முதியவர்!!

278

மனைவி இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத முதியவர் ஒருவர் தன்னுயிரையும் எமனுக்கு காணிக்கையாக்கி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 91 வயதான இசாக் வட்கின் மனைவி தெரேசா அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத கணவர் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்திருக்கிறார்.

எனினும் இசாக் வட்கின் உடலைவிட்டு உயிரும் பிரிந்து மனைவியோடு சேர்ந்தது. இன்று சர்வதேச ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்றாக இந்த தம்பதிகளின் உயிரிழப்பும் தான் பேசப்படுகிறது.

திருமணமாகி 69 ஆண்டுகள் இணைபிரியாத ஜோடியாக வாழ்ந்தவர்கள், நாற்பது நிமிட இடைவெளியில், தங்கள் உயிர்களை எமனுக்கு கொடுத்துள்ளார்கள்.

பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த இறப்பு குறித்து ஊடகங்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன.