ஏரியில் படகு கவிழ்ந்து கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி!!

288

இந்தியாவில் ஏரியில் படகு கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் திம்மராஜ் ஏரியிலே இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் நீரில் மூழ்கி மாயமான மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சுற்றுலா சென்றவர்களுக்கு இப்படி ஒரு பரிதாபம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.