வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாக சபை சர்ச்சைக்கு மத்தியில் தேர்வு!!

249

 
வவுனியா உதைபந்தாட்ட சங்க புதிய நிர்வாக சபைத் தேர்வு இன்று (29.04.2017) காலை 9.30 மணியளவில் இந்திரன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த எதிர்பர்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டம் வெற்றிகரமாக பழைய நிர்வாகசபை மறுபடியும் வவுனியாவிலுள்ள கழகங்களினால் வாக்கெடுப்பு நடைபெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா உதைபந்தாட்ட சங்கத் தலைவராக ஜோன்சன் (தேவா), செயலாளராக அ.நாகராஜா, பொருளாளராக ஏ.ஆர்.எம். லரீப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் வருடாந்த நிர்வாகசபைக் கூட்டத்தின் இறுதியில் ஊடகவியராளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கருத்தத் தெரிவித்தனர்..

நிர்வாக சபைக்கூட்டம் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. அனைத்துத்தரப்பினரும், அனைத்து விளையாட்டுக்கழகங்களின் ஒத்துழைப்பினால் மறுபடியும் பழைய நிர்வாக சபையினரே வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சங்கத்தினை வளர்த்து எடுப்பதற்கு அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். புலம்பெயார் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தாய்ச்சங்கத்திலிருந்த குறைந்தளவிலிருந்தே நிதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது சங்கத்திற்கான உதவிகளை வழங்க முன்வரவேண்டும். எமக்கு நிர்வாக கட்டடத்தினை எற்பட்தித்தர முன்வரவேண்டும்.

இன்று இடம்பெற்ற நிர்வாகச் சபை கூட்டத்திலும் அரசியல் தலையீடு காணப்பட்டது. அதையும் கடந்து இன்று வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த செயலாளர், இந்தச் சங்கத்திற்கு சிறந்த பயிற்சியாளபர்களை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். கடந்த காலங்களில் அதிக சுற்றுப்போட்டிகளை நடாத்தியிருக்கின்றோம். பாரிய சவாலுக்கு மத்தியில் பொறுப்பெடுத்திருக்கின்றோம்.

விளையாட்டுக்கழகங்களுடாக எமக்கு 2019 வரை எமக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சகல விளையாட்டுக் கலகங்களும் ஒன்றிணைந்து எமக்கு அங்கீகாரத்தினைத் தந்துள்ளார்கள். கழகங்கள் தந்த அங்கீகாரத்தினை செவ்வனே நிறைவேற்றுவோம். வவுனியா மாவட்டத்தில் இன மத பேதமற்று செயற்படுவோம் என்று தெரிவித்தார்.