வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (30.04.2017) காலை 10.30 மணியளவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் சிறப்பு விருந்தினர்களாக உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரீ.பி.ஜி.என்.டி. அல்விஸ், வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார , கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திராஜா, வி.ஜெயதிலக மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள், மாதிரிகிராம வீட்டுத்திட்ட உதவிகள், காணி அனுமதிப்பத்திரம் , சக்கர நாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டது.
பிறப்பு, இறப்பு, அனுமதிப்பத்திரங்கள் , தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு தொடர்பான விடயங்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டோர், காணாமல் போனோர், கடும்பாதிக்கபட்டோர் கொடுப்பணவு தொடர்பான விடயங்கள் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திலிலும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையில் நீண்ட காலமாக பதிவுத்திருமணத்தினை மேற்கொள்ளாதிருந்த மூன்று பேருக்கு திருமணம் இடம்பெற்றது.
அமைச்சர் ரிஸாட்டும், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனும் கையெழுத்திட்டு திருமணத்தினை செய்து வைத்துள்ளனர்.