பாகுபலி 2 திரைப்படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்!!

632

உலகமெங்கும் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள பாகுபலி-2 படம் குறித்து அறிந்திராத சில தகவல்களை கீழே பார்ப்போம்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள பாகுபலி 2 உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத சில ஸ்வாரஸ்ய தகவல்களாவன,

* `பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரமாண்டத்துக்கு காரணம் அதில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்கிகள். 33 நிறுவனங்களில் இவை உருவாக்கப்பட்டன. 70 நிபுணர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒரு லட்சத்து 45 ஆயிரம் பிரேம்கள் இவர்களால் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

* பாகுபலி-2 படத்தை பி.பி.சி தொலைக்காட்சி முதன் முறையாக ஆவணப்படமாக தயாரித்து வெளியிடுகிறது. பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் துல்லியமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

* பாகுபலி படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடல் எடையை 30 கிலோ வரை அதிகரித்தனர். இதற்காக தங்களை 8 மாதங்கள் தயார் செய்தனர். இதற்காக உடற்பயிற்சி செய்தவற்காக பிரபாஸ் அவரது வீட்டில் 1.5 கோடி செலவில் ஜிம் அமைத்தார்.

* பாகுபலி படத்துக்காக ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் 199 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் இடம் பெறும் பிரமாண்ட செட்டுகளை அமைக்க 150 நாட்கள் ஆகின. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்க வசதி இருந்தது என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.