மேல் மாகாணத்திலுள்ள 58 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்!!

281

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 58 வீதமானமை டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 889 பாடசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை டெங்கு நுளம்பு பரவும் வகையில் பாடசாலை சூழலை வைத்திருந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுற்று நிரூபத்தினூடாக ஏற்கனவே அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக்க சேனானி தெரிவித்துள்ளார்.