நடிகை திரிஷா மது போத்தல்கள் முன் இருப்பது போன்ற சர்ச்சை படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த மது விருந்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விருந்துக்கு திரிஷா தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஸ்வரி போன்றோரும் போய் இருந்தனர். விடிய விடிய இந்த விருந்து நடந்தது. திரிஷா உட்கார்ந்திருந்த மேஜையில் கிளாசில் மது ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது.
அதை குடித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரோ மர்ம நபர் இதை படம் எடுத்து இணையத்தில் பரவவிட்டுள்ளார்.
இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் திரிஷா தகராறில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
திரிஷா விருந்தில் நடனமாடியதாகவும் அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்தராறில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. திரிஷாவை பலர் சமரசபடுத்தியும் கேட்கவில்லையாம். இதனால் ஹோட்டல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் கட்டாயப்படுத்தி திரிஷாவை அங்கிருந்து வெளியேற்றி காரில் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.