அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன்!!

252

 
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வர்த்த ரீதியில் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றை 33 வயதான சேம் பிரின்ஸ் என்பவர் ஆரம்பித்து முன்னெடுத்து செல்கின்றார்.

இலங்கையை சொந்த நாடாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த சேம் பிரின்ஸ், அவுஸ்திரேலியாவில் இளவயது வர்த்தகராக முன்னிலை பெற்றுள்ளார்.

கடந்த வருடம் வெளியான இளம் பணக்காரர்கள் பட்டியலில் சேம் பிரின்ஸ் 10ஆம் இடத்தை பெற்றிருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.

2015ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவராக இருந்த போதே, பிரின்ஸ் 17 ஆயிரம் அமெரிக்க டொலரில் குறித்த ஹோட்டலை ஆரம்பித்துள்ளார்.

இளம் வயதில் இவ்வாறான சாதனை பெற்றுக்கொள்ள தனது பெற்றோர்கள் ஆதரவாக செயற்பட்டதாக சேம் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக எனது சிறு வயதில் குடும்பமாக அவுஸ்திரேலியாவில் குடியேறினோம். இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் அம்மா வாழ்ந்தார். அந்தக் கிராமதில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதல் நபரும் எனது அம்மாவே.

பல வருடங்களாக குடும்ப வருமானம் பூச்சியமாக இருந்த போதே, எனது அம்மா படித்து வந்துள்ளார். ஆனால் கஸ்டத்தின் மத்தியிலும் எனது அம்மா திறமையானவராக திகழ்ந்தார்.

ஐந்து பட்டங்கள் மற்றும் PhD பட்டங்களை பெற்ற எனது அம்மா அவுஸ்திரேலியாவில் பொருளாதார வல்லுநராக பணியாற்றுகிறார்.

அவுஸ்திரேலியாவில் சாதனையை நிலைநாட்டிய பின் வைத்தியரான சேம் பிரின்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனது அம்மாவின் கிராமத்திற்கு சென்ற சேம் பிரின்ஸ் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் பாம்பு கடித்தல் போன்ற இன்னல்களுடன் போராடிக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கும் வைத்தியரான சேம் பிரின்ஸ் பல உதவிகளை செய்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.