கிராம மக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட ரயில் விபத்து!!

246

 
காலியில் ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்று அந்தப் பகுதி மக்களின் முயற்சியில் தவிர்க்கப்பட்டுள்ளது.

காலி, பியதிகம பிரதேசத்தில் பயணித்த முச்சகர வண்டி ஒன்று ரயில் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதன் காரணமாக ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்றை பிரதேச மக்கள் இணைந்து தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டி வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வேறு வாகனம் ஒன்றிற்கு இடமளிக்க முயற்சித்த போது, பாலத்திற்கு அருகில் இருந்த மின்சார தூணுடன் மோதிய முச்சக்கர வண்டி ரயில் வீதியில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக செயற்பட்ட மக்கள் அந்த பகுதிக்கு வருகைத்தரவிருந்த ரயிலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்மூலம் அங்கு ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக காலி – கொழும்பு ரயில் பயணம் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.