இப்படியும் ஒரு இனவெறி செயல்!!

942

இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த சந்தர் மேக்வால் தன் மகளுக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த கிராமத்தில் தலித் இன மக்கள் மேளம் மட்டும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேண்டு வாத்தியங்கள் உயர்சாதியினருக்கானது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆனால் இந்த கட்டுபாட்டினை மீறி சந்தர் மேக்வால் மணமகன் அழைப்பிற்கு பேண்டு வாத்தியங்களை பயன்படுத்தி, பொலிசாரின் பாதுகாப்போடு திருமணத்தினை நடத்தினார்.

இதனால் உயர் சாதியினர் தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெயினை கொட்டி கொடூர செயலை செய்துள்ளனர்.

இதை அறிந்த கலெக்டர் டி வி சிங் மற்றும் எஸ் பி மீனா ஆகியோர் அந்த கிணற்றினை ஆய்வு செய்து, உயர் சாதியின மக்களிடம் பேசி சமாதானம் படுத்தியுள்ளார். மேலும் இரண்டு போர்வெல் போடவும் உத்தரவிட்டுள்ளார்.