தலைகீழாக கவிழ்ந்த பேருந்து : 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

287

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இப்பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது வரிசையாக பயங்கரமாக மோதியது.

அத்துடன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய பேருந்து, இறுதியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவில் பராமரிப்பு சரியில்லாத காரணத்தில் அடிக்கடி பேருந்து விபத்து நிகழ்ந்து வருவது வேதனைக்குரிய விடயமாக உள்ளது.