இலங்கை இன்று தந்திச் சேவைக்கு விடைகொடுக்கிறது!!

709

SL post

இலங்கை தபால் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தந்திச் சேவை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.

இதன்படி சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த தந்திச் சேவைக்கு இலங்கை இன்று விடை கொடுக்கிறது.

தபால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட செலவு மற்றும் தந்திச் சேவை குறித்து மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாமை காரணமாக தந்திச் சேவை நிறுத்திக் கொள்ளப்படுவதாக தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.