படுக்கை அறைக்குள் புகுந்த டிரக் : நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!

608

கனடாவின் எட்மண்டன் பகுதியில் தூக்கத்தில் இருந்த நபர் ஒருவரின் படுக்கை அறைக்குள் டிரக் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்மண்டன் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் உலோகம் நொறுங்கிய சத்தத்தில் அலறிக்கொண்டு எழுந்ததாக தெரிவித்துள்ளார். கூரையிலிருந்து இடிபாடுகளும் தூசியும் தனக்கு மேல் விழுந்துள்ளது எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளிற்கிடையில் அகப்பட்டு கொண்ட நிலையில் அருகாமையில் இருந்த தொலைபேசி மூலம் அவசர மருத்துவ சேவையினருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

டிரக்கின் இயந்திரம் கசியத்தொடங்கியதால் புகை மூட்டம் அறையை சூழ்ந்துள்ளது. வாகன சாரதி இரத்தம் கசிந்த நிலையில் பார்க்க பயந்த நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் போதையில் ஏற்பட்டதாக தெரியவில்லை என தெரிவித்த பொலிசார் மருத்துவம் சம்பந்தமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

படுக்கை டிரக்கிற்கு நெருக்கமாக இருந்திருந்தால் டிரக் அதன் மேல் ஏறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக பாதிக்கப்பட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பயங்கரமான இந்த அனுபவத்தின் பின்னர் சாரதிமீது குற்றம் சுமத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எட்மன்டன மேற்கில் இச்சம்பவம் நடந்துள்ளது.