பேய் பிடித்துள்ளது என மகனை 30 வருடங்களாக இருட்டு சிறையில் அடைத்து வைத்த பெற்றோர்!!

291

சீனாவில் தங்கள் மகன் உடலில் பேய் பிடித்திருப்பதாக கூறி 30 வருடங்கள் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவில் வசித்து வருபவர் Li Lianying. இவரின் மகனுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த முப்பது வருடங்களாக தன் மகனை Lianying தன் கணவருடன் சேர்த்து வீட்டின் இருட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அவர் உடலில் பேய் புகுந்துள்ளதால் இப்படி செய்தவாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.

இது குறித்து Lianying கூறுகையில், என் மகனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது ஒரு நாள் அவன் காணாமல் போய் விட்டான்.பின்னர் கிராம மக்கள் அவனை தேடி கண்டுபிடித்து அவன் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி பேய் ஓட்டினார்கள்.

அதன் பின்னர் அவன் எங்களிடம் வித்தியாசமாகவும், மூர்கதனமாகவும் நடந்து கொண்டான். இதையடுத்து அவன் உடலில் பேய் இருப்பதை உறுதி செய்த நாங்கள் அவனை கடந்த 30 வருடங்களாக சிறையில் அடைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையில், சிறையில் உள்ள நபரை வீடியோ எடுத்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனால் தற்போது சிறையிலிருந்து மீட்கபட்டுள்ள அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த செயலில் ஈடுபட்ட Lianyingம் அவர் கணவரும் கைது செய்யபடுவார்களா என்ற விவரம் தெரியவில்லை.