மதுவை மணந்த மணமகன் : கடைசி நிமிடத்தில் குழம்பிய திருமணம்!!

1232

தனது திருமணத்துக்கு போதையில் வந்த மணமகனை, கடைசி நிமிடத்தில் மணமகள் ஏற்க மறுத்த சம்பவம் பீஹாரில் இடம்பெற்றுள்ளது.

பித்து பாண்டே (24) என்பவர் தனது திருமணத்தன்று மது அருந்துவிட்டு வந்திருந்தார். மணமேடையில் அமர்ந்திருந்த அவர், மந்திரங்களைச் சொல்லும்போது நாக்குழறியதையும், எழுந்து நிற்கும்போது தள்ளாடியதையும், அவரிடமிருந்து மது வாசனை வீசியதையும் உணர்ந்த மணமகள் ராணி குமாரி, கடைசி நிமிடத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தார்.

ஏற்கனவே மதுவைத் திருமணம் செய்துகொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ராணி குமாரி தெரிவித்துள்ளார்.