பேஸ்புக்கால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி!!

267

முகநூலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இரண்டு நபர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த சங்கீதா என்ற 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் தனது தந்தையின் கைப்பேசியினை அதிகமாக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது, முகநூலின் வாயிலாக இப்ராஹிம் என்ற 21 வயது ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்ராஹிம்மின் காதல் வசனங்களால் மயங்கிய சங்கீதா அவருடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

ஒருமுறை இப்ராஹிம், சங்கீதாவின் வீட்டுக்கு சென்று அவரை பார்த்து பேசியுள்ளார். இதனை அறிந்த சங்கீதாவின் தாயார், இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த 5000 ரூபாயை எடுத்துக்கொண்டு இப்ராஹிம்முடன் சங்கீதா ஓடியுள்ளார். காரைக்காலில் லாட்ஜ் எடுத்து தங்கிய இவர்கள், ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

மேலும், இப்ராஹிம், சங்கீதாவை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் லாட்ஜில் வைத்து இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதையடுத்து, இப்ராஹிம்டன் செல்வதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.

இதனை கவனித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், நான் உன்னை திருப்பூருக்கு அழைத்து செல்கிறேன் எனக்கூறி இரண்டு நாட்கள் சங்கீதாவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இவரும் சங்கீதாவை பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இதற்கு சங்கீதா எதிர்ப்பு தெரிவிக்கவே, அச்சிறுமியை காரைக்கால் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

இதற்கிடையில், தங்கள் மகளை காணவில்லை என சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சங்கீதாவை மீட்டுள்ளனர்.

மேலும், இப்ராஹிம் மற்றும் லொட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.