ஊழியரின் உடலுக்குள் இருந்து 75 ஊசிகள் : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!!

270

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரின் உடலுக்குள் 70 ஊசிகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பத்ரிலால் (56) என்பவர் ரயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இவருக்கு சமீபத்தில் கால் பாதத்தில் வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது காலுக்குள் ஊசி புகுந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில்,இவருக்கு மீண்டும் கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இவரது தொண்டை முழுவதும் ஊசிகள் தொங்கி கொண்டிருந்துள்ளன.

மொத்தம் 75 ஊசிகள். கழுத்தில் மட்டும் 40 ஊசிகள் இருந்துள்ளன. ஆனால் ஊசிகள் அனைத்தும் உடலின் உள் உறுப்புகளை ஒன்றுமே செய்ய இயலவில்லை. அறுவை சிசிச்சை செய்தால் மட்டுமே இந்த ஊசிகளை அகற்ற இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றும் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது என்று பத்ரிலாலின் மகன் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது உடலில் எவ்வாறு ஊசி சென்றது என்பது குறித்து தனக்கு தெரியாது என பத்ரிலால் கூறியுள்ளார்.