கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் கொள்ளை!!

321


train

கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.



நான்கு பயணிகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. தங்க ஆபரணங்கள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.



பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களின் பொருட்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



ரயிலில் நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.