போர்ப் பதற்றத்திலும், அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை!!

654

அமெரிக்கப் படையினர் தென்கொரியாவில் நிறுவியுள்ள ஏவுகணை தடுப்புச் சாதனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சீன அரசாங்கம் அமெரி்க்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இ்ந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஹுனாங், பெய்ஜிங்கில்,

தாட் எனப்படும் ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை யெனில் சீனாவின் தற்காப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சர்வதேச நாடுகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த தாட் தடுப்புமுறையானது பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது.

200 கிலோமீற்றர் வரம்பில் 150கிலோமீற்றர் உயரம் வரை சென்று தாக்கும். வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும் என்பது சிறப்பாகும்.

வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்தச் செயற்பாட்டினால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே எங்கள் தற்காப்பிற்காக தேவையான அனைத்தையும் செய்வோம் என்று சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.