சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தான் பிரபல நடிகையான பவானி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார், குடும்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






