கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

302

தமிழ்நாட்டில் கள்ளகாதல் ஜோடி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அந்தியூரை சேர்ந்தவர் வேலு, இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதே பகுதியை சேர்ந்தவர் சுமதி, இவருக்கும் திருமணமாகி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், வேலுவுக்கும், சுமதிக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இரு வீட்டாருக்கும் தெரிந்ததையொட்டி அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டு கொள்ளாத வேலுவும், சுமதியும் தொடர்ந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் அவர்கள் ஊரின் ஏரிகரையில் நேற்று சடலமாக கிடந்துள்ளனர்.

இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இவர்கள் தவறான பழக்கத்துக்கு இரு வீட்டார்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.