ஆளுநரிடம் நியமனக் கடிதம் பெற்றார் சி.வி.விக்னேஸ்வரன்!!

582

CV.Vigneswaran

வட மாகாண சபையின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநரிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு தான் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

மேலும் நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்றதென ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதில் கடிதம் ஒன்றையும் தான் கையளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் யார் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்வது என்பது தொடர்பில் விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.