வவுனியா திருநாவற்குளம் 3ம் ஒழுங்கை பகுதியில் கடந்த சனிக்கிழமை பகல் வேளையில் மர்ம நபர்கள் சிலர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது..
கடந்த சனிகிழமை நண்பகல் வேளை வீட்டின் உரிமையாளர்கள் தாண்டிக்குளம் முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை மிக தத்துருபமாக உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து உள்ளிருந்த 25 பவுண் தங்க நகைகளையும் ஒரு லட்ச ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பொலிசில் முறையிட்டுள்ளார். வவுனியா போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.