தன்னுடைய உயிரைப் பறித்த குண்டுவெடிப்பை படம் பிடித்த அமெரிக்க இராணுவ புகைப்பட நிபுணர்!!

586

ஆப்கானிஸ்தானில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்த போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ புகைப்பட பெண் நிபுணர் ஹில்டா கிளெய்டனின் இறுதிப் புகைப்படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்த கடுமையான போர் பயிற்சியின் போது, வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில், ஹில்டா உட்பட சில வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தை ஹில்டாவின் கையில் இருந்த காம்பேட் கெமரா படம்பிடித்திருந்தது. குண்டு வெடித்து தான் உயிரிழந்த காட்சிகளை, பெண் நிபுணர் படம்பிடித்திருந்த அந்த அறிய புகைப்படத்தை அமெரிக்கா 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிட்டுள்ளது.

ஹில்டா கிளெய்டன், புகைப்பட நிபுணர் ஆவார். போர்கள் தீவிரமாக நடக்கும் போது, போரில் ஈடுபடும் வீரர்களுடன் இணைந்து, அதனை புகைப்படம் எடுக்கும் பணியை இவர் மேற்கொண்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானின் லாக்மான் மாகாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியில் இருந்த போது, வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அதனை தத்ரூபமாக படம் எடுத்து காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்கான பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்தது. இதில், 4 ஆப்கான் இராணுவ வீரர்களும், ஹில்டா கிளெய்டனும் உயிரிழந்தனர்.

ஆனால், அந்த கடைசி நொடியையும் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுபோன்ற மிக ஆபத்தான பணிகளில் பெண்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஆபத்தான தருணத்திலும் ஆண் வீரர்களுக்கு நிகராக பெண்கள் வேகமாகப் பணியாற்றுவதை இந்த புகைப்படம் உணர்த்தும் என்பதாலும் இதை வெளியிட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம், க்ளெய்டனின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.