புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களைப் பிடித்த வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள்!!(படங்கள்)

614

தரம் 5 புலமைப்பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின. இதில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.

193 புள்ளிகளைப் பெற்று அருள்ஈசன் அருவி என்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 3ம் இடத்தையும், அதே பாடசாலையைச் சேர்ந்த ரணேஸ் ஆதித்தன் 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இப் பெறுபேறு குறித்து முதலாம் இடம் பெற்ற மாணவி அருவி கூறுகையில் “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலைக்கு வருவதற்கு என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்திய எனது அம்மா, கனடாவில் வசிக்கும் எனது அப்பா மற்றம் எனது ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

சமூகத்தில் எனக்கு ஆதரவுகளும் ஊக்கப்படுத்தல்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நான் வைத்தியராக வரவேண்டும் அதுவே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

vavuniya

vavniya1