கடத்தல் வழக்கில் கைதான பிரபல நடிகை முக்கிய வாக்குமூலம் : சிக்கும் பெரும்புள்ளிகள்!!

401

செம்மர கடத்தலில் ஈடுபட்டு கைதான பிரபல நடிகையும், விமான பணிப்பெண்ணுமான சங்கீதா சாட்டர்ஜி கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் பற்றி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி (26) இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தனது கணவர் லட்சுமணன் என்பவருடன் சேர்ந்து ஆந்திரா மாநிலத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையில் கடந்த 2015ல் லட்சுமணனை பொலிசார் கைது செய்தனர். பின்னர் தனியாக கடத்தலில் ஈடுபட்டு வந்த சங்கீதா பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் அவரை பொலிசார் கொல்கத்தாவில் கைது செய்தனர். தற்போது பொலிஸ் விசாரணையில், தமிழ்நாடு, கர்நாடகா, கொல்கத்தாவில் எனக்கு முக்கியமான ஆட்களைத் தெரியும்.

அவர்களிடம் ஆர்டர் பெற்று சொன்ன இடத்துக்கு செம்மர கட்டைகளை அனுப்பிவைப்போம் என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் சொன்ன தமிழ்நாடு உள்பட மூன்று மாநில முக்கியப் புள்ளிகளை கைது செய்ய பொலிசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.