வவுனியாவில் இடம்பெற்ற சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு!!

533

 
சிறீரெலோ கட்சியினால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.05.2017) மாலை 5.30 மணியளவில் யாழிலும் வவுனியாவிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் மாலை 5.30 மணியளவில் சபாரத்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இடமாக கருதபடும் கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் யாழில் நினைவு கூறப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூத்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறந்த தம் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்திலும் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) மூத்த உறுப்பினரும் படுகொலைசெய்யப்பட்ட தலைவர் சபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலருமான அஜித் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் போராளிகளான சூரி, அல்பிரட், சாப் ஆகியோருடன் சிறீரெலோ இளைஞர் ஒன்றிய தலைவர் கார்த்திக், செயலாளர் தினேஸ் மற்றும் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்களுடன் தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி பிரேமிளா, கற்குழி கிராம மாதர் சங்க தலைவியும் சமூக சேவகியுமான திருமதி லோஜி ஆகியோர் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.