சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம்!!

309

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியுள்ளனர்.

பெகன்பரு எனும் அந்த சிறையின் பக்க வாசல் ஒன்றின் ஊடாக பல கைதிகள் தப்பிச்செல்வது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனினும், தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் பொலிஸாரால் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.

300 கைதிகளுக்கு மாத்திரம் இட வசதியுள்ள அந்த சிறையில் 1900 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு 6 சிறைக்காவலாளிகள் மாத்திரமே பணியில் இருந்ததாகவும் அந்நாட்டின் நீதி அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்கள் தம்மை மோசமாக நடத்தியதாக கைதிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் சிறைச்சாலையின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தப்பியவர்களைத் தேடும் பொருட்டு நகரெங்கும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.