சிவனொளிபாதமலைக்கு இரவில் செல்லத்தடை!!

227

சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை யாத்திரிக காலம் நிறைவுபெறுவது குறித்து, நல்லத்தண்ணி பௌத்த மத்திய நிலையத்தில், அரச திணைக்கள அதிகரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அன்மைகாலமாக குறித்த பகுதியில் மூவின மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும், சமாதானத்தை சீர்குழைக்கும் வகையிலும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்தே பருவகால நிறைவடைந்தகாலப்பகுதியில் யாத்திரிகளுக்கு மலையேர தடைவித்திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பகல் வேலைகளில் யாத்திரிகள் மலையேரமுடியும் எனவும், அவ்வாறு மலையேருவோர் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கிய பின்னரே மலைக்கு செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.