காரின் ஒலியெழுப்பியதால் நடந்த களேபரம்!!(காணொளி)

302

தமது காருக்குப் பின்னால் இருந்தபடி தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய வாகனச் சாரதியைத் தாக்க முற்பட்ட இருவரை, பலசாலி சாரதியொருவர் அடித்து வீழ்த்திய காட்சி இணையத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

இடம் குறிப்பிடப்படாத இந்தக் காட்சியில், வாகனம் ஒன்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடாதபடி வீதியை மறித்து நிற்கிறது. இதனால், அதன் பின்னால் இருந்த வாகனத்தின் சாரதி, தொடர்ச்சியாக ஒலியெழுப்பினார்.

கோபமுற்ற முதல் வாகனத்தின் சாரதி, காரை விட்டிறங்கி பேஸ்போல் மட்டையொன்றை எடுத்துக்கொண்டு சென்று பின்னால் நின்ற காரின் சாரதியை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், கையில் இருந்த மட்டையால் காரைத் தாக்கவும் செய்தார்.

அதுவரை பொறுத்துக்கொண்ட பின்னின்ற வாகனத்தின் சாரதி, வாகனத்தை விட்டிறங்கி ஒரே குத்தில் முன்னின்ற வாகனச் சாரதியை வீழ்த்தினார். இதைக் கண்டு முதல் காரில் இருந்த மற்றொருவர் இறங்கி வந்து பின்னால் வந்த காரின் சாரதியைத் தாக்கினார். ஆனால், கொஞ்சமும் சளைக்காமல் இரண்டாவது நபரையும் தாக்கி வீழ்த்திவிட்டு தனது காரில் ஏறிச் சென்றார்.

இந்தக் காணொளி, 4 இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.