ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு!!

248

திருகோணமலையில் திருமங்களாய் காட்டுப் பகுதியிலுள்ள அழிவடைந்த சிவாலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிரதேசத்தில் பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிங்கபுரம் என்ற காட்டுப்பிரதேசத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால் ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் தற்போது பெருங்காடாகவே காணப்படுகிறது.

திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ,தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் போது இந்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.