சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வாக ரகசியங்களை வெளியிட்ட மைக்கல் ஹஸி!!

288

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் மைக்கல் ஹஸி.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து குருநாத் சென்னை அணியின் சிஇஓ இல்லை கிரிக்கெட்டில் ஈடுபாடு உடையவர் மட்டுமே என சீனிவாசன் தெரிவித்து வந்தார்.

இந்த விவகாரத்தால் தனது பதவியை ராஜினாமா செய்த சீனிவாசன் மீண்டும் மூன்றாவது முறையாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் மைக்கல் ஹஸி, அன்டர்நீத் தி சதன் கிராஸ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் சென்னை அணியை நிர்வகித்தவர் குருநாத் மெய்யப்பன் தான் அவருக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கியது அவரது மாமனார் சீனிவாசன் தான் என தெரிவித்துள்ளார். இவர் சூதாட்டத்தில் பெட் கட்டும் போது சென்னை அணியின் இரகசியங்களை ஆட்ட யுக்திகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.