சீனாவில் நிலக்கரி சுரங்க வாயு கசிவில் சிக்கி 18 பேர் பலி!!

574

 
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர விஷவாயு கசிவு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் ஹுவாங்பென்கியாவ் நகரிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் நிலத்தை தோண்டியபோது அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்படவே, சுவாசிக்க முடியாமல் சிக்குண்டத்தில் 18 தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 37 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உலக அளவில் அதிகளாவன நிலக்கரியை உற்பத்தி செய்து வரும் நாடாக கூறப்பட்டாலும், அந்நாட்டில் பாதுகாப்பற்ற நிலக்கரி அகழ்வுகள் மூலம் அதிகளவிலான தொழிலாளர்கள் பலியாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.