இளம்பெண்ணை மிரட்டி துப்பாக்கி முனையில் திருமணம்!!

630

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், பாகிஸ்தானியரை திருமணம் செய்வதற்கு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் உஸ்மா (20). இவர் மலேசியா சென்று இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவரை சந்தித்துள்ளார்.

அதன் பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 3-ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற்றது.

இந்நிலையில் உஸ்மா சமீபத்தில் இந்திய தூதரகத்தை நாடியுள்ளார். அப்போது அவர் நான் பாகிஸ்தானியரை திருமணம் செய்து கொள்ள துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டேன் என்றும் என்னுடைய குடியேற்ற ஆவணங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

நான் இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்பும் வரையில் இந்திய தூதரகத்தை விட்டு வெளியே செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.