பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் : அதிரவைக்கும் காணொளி!!

475

பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அண்மையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினரின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவத்தினர் ஏவுகணைகள் மூலம் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திகதி குறிப்பிடாமல் உள்ள இந்த காணொளியில் நடைபெற்ற தாக்குதல் ஏப்ரல் மாதத்தில் நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் காணொளியில் இரண்டு இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தான் பதுங்கு குழிகளைத் தாக்குவதும், ராணுவ வீரர்களின் பேச்சுக்களும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.