50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்!!

572

டென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது.

பிஸ்னர் என்ற பீர் நிறுவனம், மனிதர்கள் பீர் அருந்துகையில் அதில் நிலைத்திருக்க புதுவகை யுத்தியை கையாள வேண்டும் என திட்டமிட்டனர்.

பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்ட பார்லியை கலந்து பீர் தயாரித்துள்ளனர்.

இதற்கு பிஸ்னர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பீர் தயாரிப்பதற்காக வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெர்ற பிரமாண்டமான இசை திருவிழாவில் இருந்து மனிதர்களின் சிறுநீர் சேகரிக்கப்பட்டது.

50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து, அறுபதாயிரம் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2015 ஆண்டு நடைபெற்ற ரோசிக்ளே இசைத் திருவிழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரெஷ் ஸ்ஜோக்ரென், ”இந்த புது ரக பீரை நான் சுவைத்தேன். ஆனால் அதில் சிறுநீரின் சுவை சிறிது கூட இல்லை” என்று தெரிவித்துள்ளார்.