ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஷேவாக், கம்பீரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஷகீர்கான் ஆகியோர் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதில் யுவராஜ் சிங் மட்டும் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளார் மற்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர். தங்களையும் தெரிவு செய்து விடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த ஷேவாக், கம்பீருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
எனவே இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது, ஷேவாக் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
கம்பீர் இங்கிலாந்து தொடருக்கு நீக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஷகீர்கான், ஹர்பஜன் சிங்கும் இதே நிலையில்தான் உள்ளனர். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அவர்கள் மீண்டும் இடம்பெற முடியாது என்று கூறிவிட இயலாது.