வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : லிப்டில் தலை நசுங்கிய கொடூரம்!!

936

இந்திய மராட்டிய மாநிலம் பாந்திராவில் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த போது லிப்ட் தலையில் மோதி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். குன்னத் ஜவேரி என்ற 12 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் வசித்து வந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் வழிப்பாதையில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து இருந்து உள்ளது. அந்த துளை வழியாக நேற்று சிறுமி தனது தலையை நுழைத்து பார்த்துள்ளார். அந்த நேரத்தில் லிப்ட் மேல் மாடியில் இருந்து கீழே வந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் லிப்ட் அவரது தலையில் மோதியது.

இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். லிப்டும் அந்தரத்தில் நின்றுள்ளது. நடுவழியில் நின்றதால் லிப்டில் இருந்தவர்களும் அலறியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் லிப்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் சிறுமியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.