விசாரணையில் தலையிடக் கூடாது என சீனிவாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

331

N_SRINIVASAN_1467333g

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம் ஆனால் ஐபிஎல் போட்டி விவகாரங்களில் தலையிடக் கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. கடைசியில் சென்னை பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதில் சீனிவாசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி தெரிவானார். இருப்பினும் இறுதி தீர்ப்பு வரும் வரை தலைவராக பொறுப்பேற்க முடியாத நிலை இருந்தது.
இதற்கிடையே நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறுகையில் பி.சி.சி.ஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம். ஆனால் ஐபிஎல் சூதாட்டம் குறித்த வெளிப்படையான விசாரணை பாதிக்கப்படக் கூடாது. ஏனெனில் சூதாட்ட வழக்கில் சிக்கிய குருநாத் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன்.

இதனால், விசாரணை தொடர்பான விஷயங்களில் இவர் தலையிடக் கூடாது. இதற்கான முழு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரவேண்டும். விசாரணை குழு எப்படி இருக்க வேண்டும் என சி.ஏ.பி மற்றும் பிசிசிஐ உடன் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வரவேண்டும். இதற்காக சி.ஏ.பியை அவசரப்படுத்தக் கூடாது.

மற்றபடி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதுதொடர்பாக பல முறைகேடுகள் வெளிவந்துள்ளன. பிசிசிஐயில் ஏதோ தவறுகள் நடக்கின்றன. சமீபகாலமாக பிசிசிஐ ஏன் தனது நம்பகத்தன்மையை இழந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.

இவ்வழக்கு வருகிற அக்டோபர் 7ம் திகதி மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.