வவுனியாவில் போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

295

 
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் சுகாதார தொண்டர்களின் போராட்ட களத்திற்கு இன்று (12.05.2017) காலை சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுகாதார தொண்டர்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் 9 நாட்களாக தமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று தெரிவித்து தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நியாயமானது. இவர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித ஊதியமும் இன்றி இந்தப்பணியினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2009ம் ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியா வைத்தியசாலையை நாடி வந்துள்ளார்கள்

காயப்பட்டவர்கள் உட்பட விஷேட தேவைக்குட்பட்டவர்கள் போன்ற பலரிற்கு சுகாதார தொண்டர்கள் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இவர்களுடைய பணி என்பது மிகப்பெரிய ஒரு பணியாக இருக்கின்றது.

ஆகவே 10 வருடங்கள் கடந்தும் இந்த சுகாதார தொண்டர்களுக்கு இது வரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இவர்களைப் போன்று வடக்கு மாகாணங்களில் இருக்கக்கூடிய ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உட்பட 800ற்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு 10 வருட காலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் இந்தப்பணியினை ஆற்றியிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சகாதார அமைச்சு இணைந்து இவர்களுடைய கடந்த கால சேவைகளை மனிதாபிமான அடிப்படையில் இவர்களுடைய தேவையை எடுத்து இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.