சசிகுமாரின் அடுத்த படத்தின் சம்பளம் 8 கோடி!!

346

sasikumar

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு பசங்க, ஈசன், போராளி, சுந்தர பாண்டியன் ஆகிய நான்கு படங்களைத் தயாரித்துள்ளார்.

சுப்ரமணியபுரத்துக்குப் பிறகு ஈசன் படத்தை மட்டுமே இயக்கியவர், நடிப்பு நன்றாக வருவதால் அதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். தற்போது சாக்ரடீஸ் இயக்கத்தில் பிரம்மன் படத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து ரவி மற்றும் லத்திப் இருவரும் அடுத்த வருடம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 25 வருடங்களாக திரைப்பட விநியோகஸ்தர்களாக உள்ளனர்.

சசிகுமாருக்கு சம்பளமாக 8 கோடி பேசப்பட்டுள்ளது. முன்பணமாக இப்போதே 3 கோடி ரூபாயைக் கொடுத்து விட்டார்களாம்.