ரஜினி, கமலுடன் இணையும் சரத்குமார்!!

318

rajniஇந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பாடல்களின் உரிமையை சொனி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த மாதம் 7ம் திகதி ஒரு பாடல் மட்டும் வெளியாகிறது.

எங்கே போகுதோ வானம் என்று தொடங்கும் அந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் ஆரம்பமாக இருக்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். ரஜினியுடன் சேர்ந்து முக்கியமான வேடத்தில் சரத்குமாரும் நடித்துள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் சரத்குமார். இப்படி அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் சரத்குமார்.

அதேசமயம் உத்தம வில்லன் படத்தை யார் இயக்குவது என்பதில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் அரவிந்த் என்று மும்முனைப் போட்டி நடந்து வருகிறதாம்.