இலங்கையின் வறுமைக்கு போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம்!!

270

இலங்­கையின் வறு­மைக்கு போதைப்­பொருள் பாவ­னையே பிர­தான கார­ண­மாகும் .இந்த நிலை­மையே உலக நாடு­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. எனவே அனைத்து பௌத்த நாடு­க­ளையும் உள்­ள­டக்­கிய சர்­வ­தேச பௌத்த வலை­ய­மைப்பு ஒன்றை கண்டி பிர­க­டனம் ஊடாக உரு­வாக்­கப்­ப­டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

சர்­வ­தேச வெசாக் தின இறுதி நாள் நிகழ்­வுகள் நேற்று கண்டி தலதா மாளி­கையில் இடம்­பெற்­றன. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பல தசாப்­­தங்­களின் பின்னர் இலங்­கை க்கு இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் உலகில் 72 நாடுகள் இலங்கை வந்து பௌத்த மாநாடு ஒன்றில் கலந்­து­கொண்­டுள்­ளன. சர்­வ­தேச வெசாக் தினத்தில் பௌத்த சிந்­த­னை­களை உல­கிற்கு கற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு வார­கா­ல­மாக நடத்­திய பெளத்த மாநா ட்டின் இறுதி நாள் இன்­றாகும்.

இவ்­வா­றா­ன­தொரு பௌத்த மாநாட்டை இலங்­கையில் நடத்த கிடைத்­தமை பெரும் பாக்­கி­ய­மா­கவே கருத முடி­கின்­றது. இந்­திய பிர­தமர் மற்றும் நேபாள ஜனா­தி­பதி உள்­ளிட்ட 72 உலக நாடு­களின் முக்­கி­யஸ்­தர்கள் இலங்கை வந்துள்ளமை என்­பது எளி­தான விட­ய­மல்ல.

நிலை­யான அபி­வி­ருத்தி மற்றும் நிலை ­யான சமா­தானம் என்­ப­வற்றை கருப்­பொ­ரு­ளாக கொண்டு சர்­வ­தேச பௌத்த மாநாடு நடை­பெறுகின்­றது. உலக மக்­க­ளுக்கு பௌத்த தர்ம சிந்­த­னை­களை கற்­பிக்க வேண்­டிய தேவை தற்­போது காணப்­ப­டு­கின்­றது. இதனால் தான் இங்கு வருகை தந்த 72 நாடு­களின் இணக்­கப்­பாட்­டுடன் கண்டி பிர­க­டனம் அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பௌத்த தர்­மத்தின் எதிர்­கால உலக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பிர­க­டனம் ஒன்றை வெளியிட கிடைத்­தமை இலங்­கைக்கு முக்­கி­ய­மா­ன­தாகும். உலகில் அனைத்து இடங்­க­ளிலும் மோதல்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான மோதல்கள் குடும்­பத்­தி­லி­ருந்து அனைத்து இடங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. பல்­வேறு மோதல்கள் காணப்­ப­டு­கின்­றன. வட கொரியா மற்றும் தென் கொரி­யா­விற்கும் இடையில் மிகவும் தீர்க்­க­மான நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது.

அதனால் கண்டி பிர­க­ட­னத்தின் ஊடான உலக வாழ் அனைத்து பௌத்­தர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சர்­வ­தேச வலை­ய­மைப்பை உரு­வாக்கி உலக சமா­தா­னத்­திற்­காக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. இது பெரு­மைக்­குரிய விட­ய­மாகும். வறுமை தொடர்பில் பேசும் போது அனைத்து நாடு­க­ளுக்கும் பொது­வான பிரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது. போதைப்­பொ­ருளை அதி­க­மாக பயன்­ப­டுத்­து­வது ஏழை மக்­க­ளாகும்.

இலங்­கையில் வறுமை அதி­க­ரிக்க போதைப்­பொருள் பயன்­பாடே பிர­தான காரணம் என ஆய்வு அறிக்­கைகள் கூறு­கின்­றன. வலய நாடு­க­ளிலும் இந்த நிலை­மையே காணப்படுகின்றது. எனவே கண்டி பிரகடனத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே கண்டி பிரகடனத்திற்காக அனைத்து உலக பௌத்த நாடுகளும் ஒன்றிணைந்து வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு தலைமைதாங்க இல ங்கை பங்களிப்புடன் செயற்படும்.