இலங்கையின் வறுமைக்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும் .இந்த நிலைமையே உலக நாடுகளிலும் காணப்படுகின்றது. எனவே அனைத்து பௌத்த நாடுகளையும் உள்ளடக்கிய சர்வதேச பௌத்த வலையமைப்பு ஒன்றை கண்டி பிரகடனம் ஊடாக உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சர்வதேச வெசாக் தின இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கை க்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் உலகில் 72 நாடுகள் இலங்கை வந்து பௌத்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுள்ளன. சர்வதேச வெசாக் தினத்தில் பௌத்த சிந்தனைகளை உலகிற்கு கற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலமாக நடத்திய பெளத்த மாநா ட்டின் இறுதி நாள் இன்றாகும்.
இவ்வாறானதொரு பௌத்த மாநாட்டை இலங்கையில் நடத்த கிடைத்தமை பெரும் பாக்கியமாகவே கருத முடிகின்றது. இந்திய பிரதமர் மற்றும் நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட 72 உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள் இலங்கை வந்துள்ளமை என்பது எளிதான விடயமல்ல.
நிலையான அபிவிருத்தி மற்றும் நிலை யான சமாதானம் என்பவற்றை கருப்பொருளாக கொண்டு சர்வதேச பௌத்த மாநாடு நடைபெறுகின்றது. உலக மக்களுக்கு பௌத்த தர்ம சிந்தனைகளை கற்பிக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. இதனால் தான் இங்கு வருகை தந்த 72 நாடுகளின் இணக்கப்பாட்டுடன் கண்டி பிரகடனம் அறிவிக்கப்படுகின்றது.
பௌத்த தர்மத்தின் எதிர்கால உலக நடவடிக்கைகள் தொடர்பில் பிரகடனம் ஒன்றை வெளியிட கிடைத்தமை இலங்கைக்கு முக்கியமானதாகும். உலகில் அனைத்து இடங்களிலும் மோதல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான மோதல்கள் குடும்பத்திலிருந்து அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. பல்வேறு மோதல்கள் காணப்படுகின்றன. வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கும் இடையில் மிகவும் தீர்க்கமான நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அதனால் கண்டி பிரகடனத்தின் ஊடான உலக வாழ் அனைத்து பௌத்தர்களையும் ஒன்றிணைத்து சர்வதேச வலையமைப்பை உருவாக்கி உலக சமாதானத்திற்காக செயற்பட வேண்டியுள்ளது. இது பெருமைக்குரிய விடயமாகும். வறுமை தொடர்பில் பேசும் போது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினையே காணப்படுகின்றது. போதைப்பொருளை அதிகமாக பயன்படுத்துவது ஏழை மக்களாகும்.
இலங்கையில் வறுமை அதிகரிக்க போதைப்பொருள் பயன்பாடே பிரதான காரணம் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. வலய நாடுகளிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. எனவே கண்டி பிரகடனத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே கண்டி பிரகடனத்திற்காக அனைத்து உலக பௌத்த நாடுகளும் ஒன்றிணைந்து வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு தலைமைதாங்க இல ங்கை பங்களிப்புடன் செயற்படும்.